Sunday, July 29, 2012

உணவு உண்பதும் ஒரு கலைதான்!




தமிழர்கள் விருந்து உபசரிப்புக்கு பெயர் போனவர்கள். அதுவும், இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று கொள்கை வகுத்து
பின்பற்றுபவர்கள். ஃபாஸ்ட் ஃபுட், பிரேக் ஃபாஸ்ட் காலத்து மக்களுக்கு அதன் நுட்பம் தெரியாது. ஆனால், அதிலும் அறிவியல் மறைந்து கிடக்கிறது. இன்றும் கிராம பகுதிகளில் நடக்கும் விருந்துகளில் உணவு இப்படித்தான் பரிமாறுகிறார்கள்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:
முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),
பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ),
பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),
பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

No comments:

Post a Comment